• Sep 19 2024

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி..! பாதுகாப்பிற்காக 1500 பொலிசார் கடமையில்..!

Sharmi / Sep 16th 2024, 2:44 pm
image

Advertisement

வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1500பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. 

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்து கொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள்,பொலிசார்,தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்கெண்ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி செயற்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் கடமைகளுக்காக 1,500ற்கும் மேற்பட்ட பொலிஸார் வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி. பாதுகாப்பிற்காக 1500 பொலிசார் கடமையில். வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1500பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்து கொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள்,பொலிசார்,தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி செயற்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக 1,500ற்கும் மேற்பட்ட பொலிஸார் வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement