• Sep 19 2024

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு

Chithra / Sep 16th 2024, 2:50 pm
image

Advertisement

 

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நேற்று (15) கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கண்காணிப்பாளர்களுக்கு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 


"நாடளாவிய ரீதியில் கடந்த 14ஆம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.   

கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. 

இதுவரை கபே அமைப்பில் 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றமை தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது. 

2015, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது சுமுகமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரசாரம் அரச சொத்து துஸ்பிரயோகம், போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன.

அதேவேளை, கடந்த 8ஆம் திகதி - 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரசாரங்கள், காணொளி பதிவுகள், போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பதிவிடப்பட்டுள்ளன.  

இவ்வாறான செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது.  

பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை. 

இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்த போதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறையும் இடம்பெறவில்லை. 

மேலும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர். 

அதேவேளை, கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.  இருந்தபோதும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் வேண்டிக்கொள்ளுவது, இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில்  ஈடுபட்டமை போன்று தேர்தல் தினத்திலும் தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள்ளும் பின்பற்ற வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என கோரியுள்ளார். 

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு  காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நேற்று (15) கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கண்காணிப்பாளர்களுக்கு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நாடளாவிய ரீதியில் கடந்த 14ஆம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.   கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை கபே அமைப்பில் 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றமை தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது. 2015, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது சுமுகமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரசாரம் அரச சொத்து துஸ்பிரயோகம், போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன.அதேவேளை, கடந்த 8ஆம் திகதி - 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரசாரங்கள், காணொளி பதிவுகள், போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பதிவிடப்பட்டுள்ளன.  இவ்வாறான செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது.  பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்த போதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறையும் இடம்பெறவில்லை. மேலும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர். அதேவேளை, கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.  இருந்தபோதும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் வேண்டிக்கொள்ளுவது, இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில்  ஈடுபட்டமை போன்று தேர்தல் தினத்திலும் தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள்ளும் பின்பற்ற வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement