• Sep 08 2024

மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய அம்புலன்ஸ்; இளைஞன் உயிரிழப்பு..!

Chithra / Jul 19th 2024, 10:38 am
image

Advertisement


காலி - கொழும்பு வீதியில் தருண சேவா மாவத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம்  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய அம்புலன்ஸ்; இளைஞன் உயிரிழப்பு. காலி - கொழும்பு வீதியில் தருண சேவா மாவத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம்  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement