• Sep 17 2024

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்துள்ள நீரிழிவு நோய்! வைத்தியர் விடுத்த எச்சரிக்கை

Chithra / Jul 19th 2024, 10:20 am
image

Advertisement

 

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்தார்.

நாம் அனைவரும் சர்க்கரை நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். 

அதிக சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.   

குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம். என அவர் தெரிவித்துள்ளார்.


கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்துள்ள நீரிழிவு நோய் வைத்தியர் விடுத்த எச்சரிக்கை  கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்தார்.நாம் அனைவரும் சர்க்கரை நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிக சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.   குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement