வெசாக் பௌர்ணமி தினத்தில் பருத்தித்துறை பொலிஸாரால் ஐஸ்கிறீம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(23) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பருத்தித்துறை நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பருத்தித்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யு. எஎ.ஸ்.ஈ.ஜயதிலக பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஐஸ்கிறீம் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.