• Sep 20 2024

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் உயிரிழப்பு

Chithra / Aug 18th 2024, 3:37 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறைக்கைதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக சிறைச்சாலை காவலர்களுக்கு பல தடவைகள் அறிவித்ததாகவும், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிசார் தெரிவித்துள்ளனர்.நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறைக்கைதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக சிறைச்சாலை காவலர்களுக்கு பல தடவைகள் அறிவித்ததாகவும், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement