• Jun 27 2025

திருமலையிலும் “அணையா விளக்கு” போராட்டம்!

shanuja / Jun 26th 2025, 9:34 am
image

செம்மணி மனிதபுதைகுழி “அணையா விளக்கு”  போராட்டம் திருகோணமலை சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் செயல் அமைப்பினரால் கடந்த மூன்று நாள்களாக “அணையா விளக்கு” போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. 


போராட்டத்தின் இறுதிநாளான நேற்று அனைவரையும் ஒன்று கூடி சர்வதேச நீதியைக் கோர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக திருகோணமலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


“தமிழின அழிப்பின் சாட்சியாக கிடக்கிறது செம்மணி என்பதை கூட்டுக்குரலாக ஒலிக்கச் செய்வோம்” எனும் கருப்பொருளின்  கீழ் திருகோணமலை சிவன்கோவிலடியில் சுடரேற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள்   ஆகியோர் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். 


இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஐ.நா ஆணையாளர் செம்மணி மனிதபுதைகுழியைப் பார்வையிட்டதுடன் அணையா விளக்குப் போராட்டகளத்துக்குச் சென்று மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்படத்தக்கது.

திருமலையிலும் “அணையா விளக்கு” போராட்டம் செம்மணி மனிதபுதைகுழி “அணையா விளக்கு”  போராட்டம் திருகோணமலை சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் செயல் அமைப்பினரால் கடந்த மூன்று நாள்களாக “அணையா விளக்கு” போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதிநாளான நேற்று அனைவரையும் ஒன்று கூடி சர்வதேச நீதியைக் கோர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக திருகோணமலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “தமிழின அழிப்பின் சாட்சியாக கிடக்கிறது செம்மணி என்பதை கூட்டுக்குரலாக ஒலிக்கச் செய்வோம்” எனும் கருப்பொருளின்  கீழ் திருகோணமலை சிவன்கோவிலடியில் சுடரேற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள்   ஆகியோர் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஐ.நா ஆணையாளர் செம்மணி மனிதபுதைகுழியைப் பார்வையிட்டதுடன் அணையா விளக்குப் போராட்டகளத்துக்குச் சென்று மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்படத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement