• Feb 20 2025

அநுர அரசாங்கம் ஒரு 'எல்போட்' அரசாங்கம்! - சாடும் சாணக்கியன் எம்.பி

Chithra / Feb 17th 2025, 2:36 pm
image


பட்டியல் வெளியிடுவதை விடுத்து மக்கள் எதிர்பார்க்கும் கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழக தினம் நேற்று மாலை நடைபெற்றது.

பெரியகல்லாறு கலாசார  மண்டபத்தில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,ஆலயங்களின் வண்ணக்கர்மார்கள்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கழக ரீதியில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த சாதனையாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் கலை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

அனைவருக்கும் தெரியும் தற்போது புதிதாக ஒரு அரசாங்கம் வந்திருக்கின்றது. நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு தான் ஓடுவது வழக்கம் ஆனால் இந்த அரசாங்கமும் எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றார்கள். 

21 மாவட்டங்களிலே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எத்தனையோ நம்பிக்கைகளையும், வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். பெரியநீலாவணைப் பிரதேசத்திலே புதிதாக ஒரு மதுபானசாலை அமைய பெற்றுள்ளது. 

அதனை பார்வையிடுவதற்காகவும் நாம் சென்றிருந்தோம். மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் பொழுது பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து இருந்தார்கள்.

களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க தீர்த்து வைக்கவில்லை. 

அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் செயற்பாடானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் எமது பிள்ளைகள் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கினால் மாத்திரம்தான் எமது பிரதேசங்களை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப முடியும். 

ஒரு காலத்திலேயே இலங்கையிலே இருக்கின்ற அரச திணைக்களங்களிலே தமிழர்கள்தான் அதிகளவு பதவிகளை வைகித்திருந்தார்கள். இந்த நிலையில் கல்வியில் எமது மாணவர்களை ஊக்கப்படுத்தினால்தான் எதிர்காலத்திலே மாணவர்கள் சிறந்த நிலையை அடைந்து கொள்வார்கள் அப்போது எமது கிராமங்களும் அபிவிருத்தி அடைந்து கொண்டு செல்லும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.


அநுர அரசாங்கம் ஒரு 'எல்போட்' அரசாங்கம் - சாடும் சாணக்கியன் எம்.பி பட்டியல் வெளியிடுவதை விடுத்து மக்கள் எதிர்பார்க்கும் கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழக தினம் நேற்று மாலை நடைபெற்றது.பெரியகல்லாறு கலாசார  மண்டபத்தில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,ஆலயங்களின் வண்ணக்கர்மார்கள்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன் போது கழக ரீதியில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த சாதனையாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் கலை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,அனைவருக்கும் தெரியும் தற்போது புதிதாக ஒரு அரசாங்கம் வந்திருக்கின்றது. நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு தான் ஓடுவது வழக்கம் ஆனால் இந்த அரசாங்கமும் எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றார்கள். 21 மாவட்டங்களிலே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எத்தனையோ நம்பிக்கைகளையும், வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். பெரியநீலாவணைப் பிரதேசத்திலே புதிதாக ஒரு மதுபானசாலை அமைய பெற்றுள்ளது. அதனை பார்வையிடுவதற்காகவும் நாம் சென்றிருந்தோம். மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் பொழுது பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து இருந்தார்கள்.களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க தீர்த்து வைக்கவில்லை. அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் செயற்பாடானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் எமது பிள்ளைகள் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கினால் மாத்திரம்தான் எமது பிரதேசங்களை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப முடியும். ஒரு காலத்திலேயே இலங்கையிலே இருக்கின்ற அரச திணைக்களங்களிலே தமிழர்கள்தான் அதிகளவு பதவிகளை வைகித்திருந்தார்கள். இந்த நிலையில் கல்வியில் எமது மாணவர்களை ஊக்கப்படுத்தினால்தான் எதிர்காலத்திலே மாணவர்கள் சிறந்த நிலையை அடைந்து கொள்வார்கள் அப்போது எமது கிராமங்களும் அபிவிருத்தி அடைந்து கொண்டு செல்லும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement