• Oct 13 2024

அராலி பேச்சியம்மாள் ஆலய மானம்பூ உற்சவம்!

Chithra / Oct 13th 2024, 3:47 pm
image

Advertisement

 

அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில், நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான மானம்பூ உற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அதனைத் தொடர்ந்து வாழை வெட்டு நடைபெற்றது.

கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளிடம் இருந்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.


அராலி பேச்சியம்மாள் ஆலய மானம்பூ உற்சவம்  அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில், நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான மானம்பூ உற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வாழை வெட்டு நடைபெற்றது.கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளிடம் இருந்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement