• Sep 20 2024

தமிழ் இளைஞர் ஒருவர் மீது இராணுவம் வெறியாட்டம்- 8 சிப்பாய்கள் கைது!

Tamil nila / Sep 2nd 2024, 6:41 pm
image

Advertisement

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 8 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் நிலைய அதிபரால் பண்டாரடவளை பொலிஸாருக்குத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் மேற்படி இராணுவச் சிப்பாய்கள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய அலுவலகக் கடமையின் நிமித்தம் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வேளையில் ரயிலில் இருந்து இறங்கியுள்ள மேற்படி இராணுவச் சிப்பாய்கள், பாடல் பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர். இதன்போது நிலத்தில் வீழ்ந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்குத் தமிழ் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.

இதன் போது அந்தத் தமிழ் இளைஞர் பணம் களவாடியுள்ளார் என்று கூறி அவர் மீது இராணுவச் சிப்பாய்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரயில் நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலைத் தடுக்கச் சென்ற வேளை, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரவளை ரயில் நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.


தமிழ் இளைஞர் ஒருவர் மீது இராணுவம் வெறியாட்டம்- 8 சிப்பாய்கள் கைது பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 8 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரயில் நிலைய அதிபரால் பண்டாரடவளை பொலிஸாருக்குத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் மேற்படி இராணுவச் சிப்பாய்கள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய அலுவலகக் கடமையின் நிமித்தம் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அவ்வேளையில் ரயிலில் இருந்து இறங்கியுள்ள மேற்படி இராணுவச் சிப்பாய்கள், பாடல் பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர். இதன்போது நிலத்தில் வீழ்ந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்குத் தமிழ் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.இதன் போது அந்தத் தமிழ் இளைஞர் பணம் களவாடியுள்ளார் என்று கூறி அவர் மீது இராணுவச் சிப்பாய்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ரயில் நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலைத் தடுக்கச் சென்ற வேளை, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் பண்டாரவளை ரயில் நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement