• Jun 19 2025

பேருந்தில் வைத்து பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை- இராணுவ சிப்பாய் கைது..!

Sharmi / Jun 18th 2025, 2:16 pm
image

மன்னார் முருங்கன் பகுதியில் பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு இன்று(18) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப் பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி,  முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் குறித்த   இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



பேருந்தில் வைத்து பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை- இராணுவ சிப்பாய் கைது. மன்னார் முருங்கன் பகுதியில் பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு இன்று(18) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப் பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.இதனையடுத்து பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி,  முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் குறித்த   இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement