• Sep 15 2025

ஆசிய கோப்பை தொடர் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

shanuja / Sep 15th 2025, 10:57 am
image

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 


ஆசிய கோப்பை தொடரின் 6ஆவது லீக் போட்டி  டுபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்  துடுப்பாட்டைத்  தேர்வு செய்தது.


அதன்படி, முதலில்  துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர்.

 

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 


இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது .அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 


திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47

ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 


இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை தொடர் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆசிய கோப்பை தொடரின் 6ஆவது லீக் போட்டி  டுபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்  துடுப்பாட்டைத்  தேர்வு செய்தது.அதன்படி, முதலில்  துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது .அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement