• Apr 25 2025

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

Sharmi / Apr 25th 2025, 2:29 pm
image

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம்(25) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

2984-வது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைந்து திரிவதாகவும், இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் எமக்கான உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை எனவும் சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.




வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம்(25) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்றது.இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,2984-வது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைந்து திரிவதாகவும், இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் எமக்கான உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை எனவும் சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.அதேவேளை, தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement