அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக இயக்கச்சி அம்மாச்சி உணவகம் முன்பாக இடம்பெற்று வருகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டமானது நாளையதினம் (10) நிறைவடையவுள்ளது.