• Apr 28 2024

கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்த பசில்..! மறைமுக சதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 29th 2023, 8:11 am
image

Advertisement

 

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி  முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்சவை, அவரது சகோதரரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச விரட்டியடித்ததாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சதியின் பின்னணியில், அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் திட்டம் பசில் ராஜபக்சவுக்கு இருந்ததாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

தேசியவாத அரசியலை தாம் 30 வருட காலமாக முன்னெடுப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசியவாதம் என்பது இலங்கை மாத்திரமின்றி அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானது

முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்திருந்ததாக அவர்  கூறியுள்ளார்.

எனினும், அவர்  பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னணியில்,  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தேசியவாதத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச மறைமுகமாக இலங்கையை ஆட்சி செய்யததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டபய ராஜபக்சவின அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்த பசில். மறைமுக சதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்  நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி  முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்சவை, அவரது சகோதரரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச விரட்டியடித்ததாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சதியின் பின்னணியில், அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் திட்டம் பசில் ராஜபக்சவுக்கு இருந்ததாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.தேசியவாத அரசியலை தாம் 30 வருட காலமாக முன்னெடுப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், தேசியவாதம் என்பது இலங்கை மாத்திரமின்றி அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானதுமுன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்திருந்ததாக அவர்  கூறியுள்ளார்.எனினும், அவர்  பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பின்னணியில்,  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தேசியவாதத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச மறைமுகமாக இலங்கையை ஆட்சி செய்யததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டபய ராஜபக்சவின அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement