தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தெஹிவளை - கல்கிசை மயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம் தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.