• Oct 26 2024

பறவைக் காய்ச்சல் குறித்து அவதானம் - இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Chithra / Jun 23rd 2024, 7:37 am
image

Advertisement

 

இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இன்புளூவன்ஸா வைரஸால் ஏற்படுகிறது, இது முக்கியமாக பறவைகளை தாக்குகிறது, மேலும் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது.

இன்புளூவன்ஸா வைரஸின் பல விகாரங்கள் மற்றும் துணை விகாரங்கள் உள்ளன. 

சமீபத்தில், இன்புளூவன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை இந்தியாவில் பதிவாகியுள்ளது. 

2019 க்குப் பிறகு இன்புளூவன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அந்தக் குழந்தையாகும்.

இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்து நிகழ்வுகளும் விலங்குகளிடமிருந்து வந்தவையாகும், மேலும் பறவைக் காய்ச்சல் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், H5, H7 மற்றும் H9 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறன் இலங்கைக்கு உள்ளது. 

பறவைக் காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறனைக் கொண்டுள்ளன என்று விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா தெரிவித்தார்.

மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் பழகுபவர்கள் எப்போதும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணியுமறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


பறவைக் காய்ச்சல் குறித்து அவதானம் - இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை  இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பறவைக் காய்ச்சல் இன்புளூவன்ஸா வைரஸால் ஏற்படுகிறது, இது முக்கியமாக பறவைகளை தாக்குகிறது, மேலும் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது.இன்புளூவன்ஸா வைரஸின் பல விகாரங்கள் மற்றும் துணை விகாரங்கள் உள்ளன. சமீபத்தில், இன்புளூவன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை இந்தியாவில் பதிவாகியுள்ளது. 2019 க்குப் பிறகு இன்புளூவன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அந்தக் குழந்தையாகும்.இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்து நிகழ்வுகளும் விலங்குகளிடமிருந்து வந்தவையாகும், மேலும் பறவைக் காய்ச்சல் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், H5, H7 மற்றும் H9 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறன் இலங்கைக்கு உள்ளது. பறவைக் காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறனைக் கொண்டுள்ளன என்று விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா தெரிவித்தார்.மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் பழகுபவர்கள் எப்போதும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணியுமறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement