கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றிலிருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் சடலங்களை ஏற்றி வந்த படகு இன்று புதன்கிழமை (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள் படகிலேயே இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.