• Sep 20 2024

சந்தேகத்துக்கிடமான முறையில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்கள்..!

Chithra / Jul 29th 2024, 1:06 pm
image

Advertisement

 

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதிகொட பகுதியில் தடுகம் ஓயாவில் நேற்று  ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 10 அங்குலம் உயரம் உடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை அம்பாறை, தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவபெடிகேவெல பகுதியில் நேற்று (28) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய, முவபெடிகேவெல பகுதியில் வசிக்கும்  31 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலத்திற்கு அருகில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சந்தேகத்துக்கிடமான முறையில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்கள்.  சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதிகொட பகுதியில் தடுகம் ஓயாவில் நேற்று  ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என  பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 10 அங்குலம் உயரம் உடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலமானது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை அம்பாறை, தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவபெடிகேவெல பகுதியில் நேற்று (28) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.தெஹியத்தகண்டிய, முவபெடிகேவெல பகுதியில் வசிக்கும்  31 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரது சடலத்திற்கு அருகில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement