• Apr 15 2025

காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

Chithra / Apr 13th 2025, 3:50 pm
image


குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று நேற்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும், நீல நிற முழுக்கை சேட் மற்றும்  காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட ஆணின் சடலம் குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று நேற்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும், நீல நிற முழுக்கை சேட் மற்றும்  காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement