• Apr 24 2025

மர்ம நபர் அழைத்துச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு: வெளியாகிய CCTV காட்சியால் அம்பாறையில் பரபரப்பு..!

Sharmi / Apr 23rd 2025, 11:43 am
image

பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீர் குழியிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த  குறித்த சிறுவனை  பொதுமக்களுடன்  இணைந்து  பொலிஸாரும் தேடிய நிலையில்  அச்சிறுவனின்  வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா  என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.

எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.

அதேவேளை குறித்த குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படுகின்றது.

இது தவிர  மரணம் அடைந்த சிறுவனின் சடலம்  தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மர்ம நபர் அழைத்துச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு: வெளியாகிய CCTV காட்சியால் அம்பாறையில் பரபரப்பு. பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீர் குழியிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த  குறித்த சிறுவனை  பொதுமக்களுடன்  இணைந்து  பொலிஸாரும் தேடிய நிலையில்  அச்சிறுவனின்  வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா  என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.அதேவேளை குறித்த குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படுகின்றது.இது தவிர  மரணம் அடைந்த சிறுவனின் சடலம்  தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement