• Jun 22 2025

இணையத்தில் தகாத புகைப்படங்களை வெளியிட்ட காதலன் கைது!

shanuja / Jun 22nd 2025, 12:07 am
image

நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின்  தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட இளைஞன் மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிப்பவர் என்று கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.


தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.


அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும்​​, இளைஞர் ஒருவரை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


காதல் உறவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே குறித்த இளைஞன் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என  காதலியான மாணவி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மாணவியான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேகநபரிடம் காதலி மற்றும் மற்றொரு பெண்ணின் தகாத புகைப்படங்கள் மற்றும் தகாத வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன், மடிக்கணினி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இணையத்தில் தகாத புகைப்படங்களை வெளியிட்ட காதலன் கைது நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின்  தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிப்பவர் என்று கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும்​​, இளைஞர் ஒருவரை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காதல் உறவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே குறித்த இளைஞன் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என  காதலியான மாணவி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மாணவியான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் காதலி மற்றும் மற்றொரு பெண்ணின் தகாத புகைப்படங்கள் மற்றும் தகாத வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன், மடிக்கணினி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement