• May 11 2024

17 வயது காதலியை வன்புணர்வு செய்த காதலனின் நண்பன்! காவல்துறை வலைவீச்சு samugammedia

Chithra / Apr 5th 2023, 7:50 am
image

Advertisement

நண்பனின் காதலியை பலாத்காரமாக வன்புணர்வு செய்த சக நண்பனை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று 17 வயதான காதலி சென்றுள்ளார். அதேநேரம் அவசர வேலை காரணமாக வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றுள்ளார்.

 அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார் என காதலி கூறவே, புகைப்பொருளை பற்றவைப்பதற்காக நெருப்பை கேட்டுள்ளார். 

காதலியும் தீப்பெட்டியை எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற​போது, பின்னால் சென்ற அவர், காதலியின் வாயை பொத்தி, வீட்டுக்குள்ளேயே தள்ளிக்கொண்டுச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்தவற்றை அச்சிறுமி மாமியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த காவல்துறையினர், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

17 வயது காதலியை வன்புணர்வு செய்த காதலனின் நண்பன் காவல்துறை வலைவீச்சு samugammedia நண்பனின் காதலியை பலாத்காரமாக வன்புணர்வு செய்த சக நண்பனை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.இந்த சம்பவம் மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று 17 வயதான காதலி சென்றுள்ளார். அதேநேரம் அவசர வேலை காரணமாக வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார் என காதலி கூறவே, புகைப்பொருளை பற்றவைப்பதற்காக நெருப்பை கேட்டுள்ளார். காதலியும் தீப்பெட்டியை எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற​போது, பின்னால் சென்ற அவர், காதலியின் வாயை பொத்தி, வீட்டுக்குள்ளேயே தள்ளிக்கொண்டுச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.தனக்கு நேர்ந்தவற்றை அச்சிறுமி மாமியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த காவல்துறையினர், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement