• Dec 02 2025

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று - சிகிச்சை பலனின்றி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

shanuja / Dec 1st 2025, 2:47 pm
image

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். 


கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,


இவருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.


மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று - சிகிச்சை பலனின்றி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,இவருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement