• Apr 17 2026

கடையை உடைத்து நெல் மூட்டைகளை சாப்பிட்டு காட்டு யானைகள் அட்டகாசம் - பாலத்தோப்பூரில் பதற்றம்

Chithra / Apr 17th 2026, 8:32 am
image

திருகோணமலை - பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் பெரும்சேதங்களை விளைவித்துள்ளன.


இதன்போது நெல் கடையொன்றை உடைத்து, அங்கிருந்த நெல் மூட்டைகளை சாப்பிட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளன.


மேலும் பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள வீடுகளில் காணப்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நஷ்ட ஈடு வழங்கி, யானையை அப்புறப்படுத்த முன் வரவேண்டும் என பாலத்தோப்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


கடையை உடைத்து நெல் மூட்டைகளை சாப்பிட்டு காட்டு யானைகள் அட்டகாசம் - பாலத்தோப்பூரில் பதற்றம் திருகோணமலை - பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் பெரும்சேதங்களை விளைவித்துள்ளன.இதன்போது நெல் கடையொன்றை உடைத்து, அங்கிருந்த நெல் மூட்டைகளை சாப்பிட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளன.மேலும் பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள வீடுகளில் காணப்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நஷ்ட ஈடு வழங்கி, யானையை அப்புறப்படுத்த முன் வரவேண்டும் என பாலத்தோப்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement