• Mar 05 2026

ராஜித சேனாரத்ன மீது இலஞ்ச வழக்கு – விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு!

Thansita / Jun 27th 2025, 9:33 pm
image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.  

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த துறையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்று (27) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  

நீதிமன்றத்தில் ஆஜராகிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், அப்போதைய அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரத்னவை விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சந்தேக நபராக அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு அரசியல் மற்றும் ஊழல் தடுப்பு வட்டாரங்களில் கவனம் பெறுகிறது.

ராஜித சேனாரத்ன மீது இலஞ்ச வழக்கு – விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த துறையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்று (27) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிமன்றத்தில் ஆஜராகிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், அப்போதைய அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரத்னவை விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சந்தேக நபராக அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு அரசியல் மற்றும் ஊழல் தடுப்பு வட்டாரங்களில் கவனம் பெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement