• Apr 02 2025

தமிழ் இனவாதிகளின் வாக்குகளுக்காக இராணுவ பிரதானிகள் மீது தடைவிதித்த பிரித்தானியா! கம்மன்பில குற்றச்சாட்டு

Chithra / Mar 28th 2025, 11:12 am
image


தமிழ் இனவாதிகளின்  வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சர்வஜன கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரித்தானிய அரசாங்கம் தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக தடை விதித்துள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியாகி காலதாமதமான நிலையில் தான் வெளிவிவகாரத்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானத்தால் இலங்கையின் நல்லிணக்கத்துக்கும், அதன் வகிபாகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளமை உண்மையானது.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும் போது அரசாங்கம் கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்தோம்.

முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. 

பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும்  கடற்படைத் தளபதி ஒருவர் மீது  பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் பாரதூரமானதுடன்,நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும்.

பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது. என்றார்.

தமிழ் இனவாதிகளின் வாக்குகளுக்காக இராணுவ பிரதானிகள் மீது தடைவிதித்த பிரித்தானியா கம்மன்பில குற்றச்சாட்டு தமிழ் இனவாதிகளின்  வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.சர்வஜன கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பிரித்தானிய அரசாங்கம் தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி காலதாமதமான நிலையில் தான் வெளிவிவகாரத்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.பிரித்தானியாவின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானத்தால் இலங்கையின் நல்லிணக்கத்துக்கும், அதன் வகிபாகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளமை உண்மையானது.இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும் போது அரசாங்கம் கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்தோம்.முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும்  கடற்படைத் தளபதி ஒருவர் மீது  பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் பாரதூரமானதுடன்,நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும்.பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement