46 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீர் கொழும்பு மேலதிக நீதிவான் தருஷிக்கா பிரேமரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் தொடர்பில் அண்மையில் வெளியாகிய சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதுடன் நீதிவான் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வரும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாய்லாந்து பாங்காக் நகரிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த 12 ஆம் திகதி வருகை தந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
யுவதி அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது அவரது பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருளுடன் கைதான பிரித்தானிய பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில். 46 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.நீர் கொழும்பு மேலதிக நீதிவான் தருஷிக்கா பிரேமரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சந்தேக நபர் தொடர்பில் அண்மையில் வெளியாகிய சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதுடன் நீதிவான் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வரும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தாய்லாந்து பாங்காக் நகரிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த 12 ஆம் திகதி வருகை தந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.யுவதி அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது அவரது பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.