• May 21 2024

பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு

Chithra / May 10th 2024, 3:04 pm
image

Advertisement

 

பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 79 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பெண் உட்பட நால்வர் விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த பகுதியிலுள்ள வளைவொன்றில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால், ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெற்றமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு  பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் 79 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.அத்துடன் பெண் உட்பட நால்வர் விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.குறித்த பகுதியிலுள்ள வளைவொன்றில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால், ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெற்றமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement