• Aug 21 2026

வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவரை மோதிக்கொன்ற பேருந்து - கொழும்பில் துயரம்

Chithra / Aug 21st 2026, 12:17 pm
image


கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.


புறக்கோட்டை (Pettah) பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவரை மோதிக்கொன்ற பேருந்து - கொழும்பில் துயரம் கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.புறக்கோட்டை (Pettah) பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement