• May 17 2024

யாழில் இருந்து பயணித்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து: பெண் உட்பட பல உயிர்களை காவுகொண்ட சோகம்

Chithra / Jan 24th 2024, 8:04 am
image

Advertisement


கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 




யாழில் இருந்து பயணித்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து: பெண் உட்பட பல உயிர்களை காவுகொண்ட சோகம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement