• Jul 01 2025

வீதியை விட்டு விலகிய பஸ் மரத்தில் மோதி விபத்து!

shanuja / Jun 30th 2025, 11:26 am
image

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை இறக்கி விட்டுச் சென்ற பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்துச் சம்பவம்  காத்தான்குடி கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது. 


மட்டக்களப்பு -  கல்முனை சாலை வழியே தேற்றாத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் கிரான்குளம்  பகுதியில் வீதியை விட்டு விலகி  மரத்துடன் மோதி  விபத்துக்குள்ளானது.


குறித்த பஸ்ஸில் சாரதி, நடத்துனர்கள், கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். 


விபத்து நிகழ முன்பு கதிர்காம யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு சாரதி உட்பட மூவர் பயணித்த போதே இந்த விபத்து சம்பவித்தது. 

 

இதனால் அதிர்ஸ்டவசமாக கதிர்காம யாத்திரிகர்கள் விபத்தில் சிக்காமல் தப்பினர். அத்துடன் பஸ்ஸில் இருந்த மூவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 


மேலும் விபத்தில்  பஸ் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் பஸ் மோதிய மரமும் முறிந்து விழுந்துள்ளது. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீதியை விட்டு விலகிய பஸ் மரத்தில் மோதி விபத்து கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை இறக்கி விட்டுச் சென்ற பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துச் சம்பவம்  காத்தான்குடி கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு -  கல்முனை சாலை வழியே தேற்றாத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் கிரான்குளம்  பகுதியில் வீதியை விட்டு விலகி  மரத்துடன் மோதி  விபத்துக்குள்ளானது.குறித்த பஸ்ஸில் சாரதி, நடத்துனர்கள், கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். விபத்து நிகழ முன்பு கதிர்காம யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு சாரதி உட்பட மூவர் பயணித்த போதே இந்த விபத்து சம்பவித்தது.  இதனால் அதிர்ஸ்டவசமாக கதிர்காம யாத்திரிகர்கள் விபத்தில் சிக்காமல் தப்பினர். அத்துடன் பஸ்ஸில் இருந்த மூவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் விபத்தில்  பஸ் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் பஸ் மோதிய மரமும் முறிந்து விழுந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement