• Sep 20 2024

மட்டக்களப்பில் நடைபெற்ற அனுர குமாரதிசநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரம்!

Tamil nila / Aug 16th 2024, 8:28 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் அனுர குமாரதிசநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம். அஜிவத் தலைமையில் நடைபெற்றது.

இதனை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கல்குடா கிளை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் ஓட்டமாவடி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அநுரவை ஏன் ஆதரிக்கவேண்டும் என  ஊடகங்களுக்கு தமது கருத்து தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல்லா மற்றும் கல்குடா செயற்குழு உறுப்பினர் எம்.பி.எம்.இர்சாத் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டனர். 



மட்டக்களப்பில் நடைபெற்ற அனுர குமாரதிசநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரம் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் அனுர குமாரதிசநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம். அஜிவத் தலைமையில் நடைபெற்றது.இதனை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கல்குடா கிளை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் ஓட்டமாவடி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து அநுரவை ஏன் ஆதரிக்கவேண்டும் என  ஊடகங்களுக்கு தமது கருத்து தெரிவித்தனர்.இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல்லா மற்றும் கல்குடா செயற்குழு உறுப்பினர் எம்.பி.எம்.இர்சாத் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement