திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.
தனியார் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கையில் குறித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.