இந்தியாவில் தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், மூன்று பிள்ளைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தின் சே.நாச்சியார் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி இரத்தினா.இவர்களுக்கு ராஜலட்சுமி (5), தேஜா ஸ்ரீ (இரண்டரை வயது) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
ராமஜெயம் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் பயணித்துள்ளார். இவர்களுடன் ராஜேஷ் (29) என்ற உறவினரும் சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து ராமஜெயத்தின் குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். அவர்கள் வந்த காரின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லொறி மீது பலமாக மோதியது.
குறித்த இந்த விபத்தில் இரத்தினா மற்றும் அவரது பிள்ளைகளான தேஜா ஸ்ரீ, ராஜலட்சுமி, உறவினர் ராஜேஷ் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமஜெயமும் அவரது மூன்று மாத குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை பாதி வழியிலேயே இறந்துள்ளது. காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் கண்முன்னேயே மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லொறி மீது கார் மோதி கோர விபத்து- கணவன் கண்முன்னே மனைவி, மூன்று பிள்ளைகள் உயிரிழந்த சோகம் samugammedia இந்தியாவில் தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், மூன்று பிள்ளைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தின் சே.நாச்சியார் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி இரத்தினா.இவர்களுக்கு ராஜலட்சுமி (5), தேஜா ஸ்ரீ (இரண்டரை வயது) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.ராமஜெயம் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் பயணித்துள்ளார். இவர்களுடன் ராஜேஷ் (29) என்ற உறவினரும் சென்றுள்ளார்.சென்னையில் இருந்து ராமஜெயத்தின் குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். அவர்கள் வந்த காரின் டயர் திடீரென வெடித்துள்ளது.இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லொறி மீது பலமாக மோதியது.குறித்த இந்த விபத்தில் இரத்தினா மற்றும் அவரது பிள்ளைகளான தேஜா ஸ்ரீ, ராஜலட்சுமி, உறவினர் ராஜேஷ் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ராமஜெயமும் அவரது மூன்று மாத குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை பாதி வழியிலேயே இறந்துள்ளது. காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவர் கண்முன்னேயே மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.