• May 09 2026

வரலாற்றின் குரல் சேர்மன் வ.நா.தம்பிராசா நூல் வெளியீடு!

shanu / May 9th 2026, 5:49 pm
image

வரலாற்றின் குரல் சேர்மன் வ.நா. தம்பிராசா நூல் வெளியீட்டு நிகழ்வும் வீதிப் பெயர் பலகைக்கான திரை நீக்கமும் திருகோணமலை தி/சாம்பல் தீவு தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று (09.05.2026) இடம் பெற்றது.


நாமகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சட்டத்தரணி ந.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.


நூலின் முதற் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வழங்கி வைத்தார்.

இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத் தம்பி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வரலாற்றின் குரல் சேர்மன் வ.நா.தம்பிராசா நூல் வெளியீடு வரலாற்றின் குரல் சேர்மன் வ.நா. தம்பிராசா நூல் வெளியீட்டு நிகழ்வும் வீதிப் பெயர் பலகைக்கான திரை நீக்கமும் திருகோணமலை தி/சாம்பல் தீவு தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று (09.05.2026) இடம் பெற்றது.நாமகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சட்டத்தரணி ந.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.நூலின் முதற் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வழங்கி வைத்தார்.இதில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத் தம்பி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement