திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் எம்.ஜி.ஜே துஷார சம்பத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (20) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்களிப்பில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்
எம். ஜி. ஜே. துஷார சம்பத் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 16 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இதில், 9 வாக்குகள் தவிசாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும், தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து உதவி தவிசாளராக, சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் கே.கே. திமுத்து பிரியங்கர போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
சேருவில பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம் திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் எம்.ஜி.ஜே துஷார சம்பத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (20) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.இதன் போது தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்களிப்பில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஜி. ஜே. துஷார சம்பத் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 16 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இதில், 9 வாக்குகள் தவிசாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும், தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.அதனையடுத்து உதவி தவிசாளராக, சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் கே.கே. திமுத்து பிரியங்கர போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.