• Oct 09 2024

இலங்கைக்கு விரைவில் வரவுள்ள சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் - அநுர அரசு அனுமதி

Chithra / Oct 8th 2024, 12:30 pm
image

Advertisement

 

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 

இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது போல் சீனாவுடனும் வர்த்தகம் செய்து வருகிறோம்.

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கப்பல் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாம் உண்மையில் எந்த நாட்டையும் பிரித்துப் பார்க்கவில்லை. நாடு சிறியதோ பெரியதோ என்று அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளை சமநிலையில் பேணுகிறது. 

எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. 

சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம்.

இந்தியாவைப் போலவே சீனாவையும் கையாளுகிறோம். கோவில்களுக்கு சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் சீனாவில் உள்ளது. 

நாங்கள் அதில் தலையிடுகிறோம். இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம். இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்னதாக, அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமச்சீராக நடந்து கொள்கிறோம்.

இலங்கைக்கு விரைவில் வரவுள்ள சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் - அநுர அரசு அனுமதி  இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது போல் சீனாவுடனும் வர்த்தகம் செய்து வருகிறோம்.சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இக்கப்பல் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.நாம் உண்மையில் எந்த நாட்டையும் பிரித்துப் பார்க்கவில்லை. நாடு சிறியதோ பெரியதோ என்று அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளை சமநிலையில் பேணுகிறது. எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம்.இந்தியாவைப் போலவே சீனாவையும் கையாளுகிறோம். கோவில்களுக்கு சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் சீனாவில் உள்ளது. நாங்கள் அதில் தலையிடுகிறோம். இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம். இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்னதாக, அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமச்சீராக நடந்து கொள்கிறோம்.

Advertisement

Advertisement

Advertisement