இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழு ஒன்று இன்று மாலை யாழில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
வடக்கு மாகாணத்துக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள சீன அதிகாரிகள், வடக்கின் பல பகுதிகளிலும் சீன அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவரும் நிலையில் , இன்றைய தினம் தனிப்பட்ட பயணமாக யாழ் கோட்டைப் பகுதிக்கு சென்றிருந்தனர்.
இதன்போது யாழ் ஒல்லாந்தர் கோட்டையின் புராதன வரலாறுகள் குறித்து குறித்த அதிகாரிகள் கேட்டறிந்துகொண்ட அதேவேளை, குறித்த பகுதியில் அமைந்துள்ள பல அடையாளங்களையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.