• Jun 06 2025

நிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் கைது!

Chithra / Jun 5th 2025, 2:53 pm
image



நிதி மோசடி தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி அந்தப் பெண் ரூ.1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறி ரூ.1.916 மில்லியனையும் மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில், அந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைதின் பின்னர், கோட்டை நீதிவான் நீதிமன்றம் அந்தப் பெண் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான், ஜூன் 11 ஆம் திகதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

நிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் கைது நிதி மோசடி தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி அந்தப் பெண் ரூ.1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறி ரூ.1.916 மில்லியனையும் மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில், அந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.கைதின் பின்னர், கோட்டை நீதிவான் நீதிமன்றம் அந்தப் பெண் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான், ஜூன் 11 ஆம் திகதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement