திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன், கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்கு என அரசாங்கத்தை வழியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவான வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன், கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்கு என அரசாங்கத்தை வழியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவான வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.