மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 3 பேரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபரும்
அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளார்கள்.
இந் நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் சேர்ந்து பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வயல்பகுதிக்கு அன்று பிற்பகல் சென்றிருந்த ஆவளை கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிசாரிடம் தெரியப்படத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனா.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் மதுபானம் அருந்திய நண்பர்களிடையே உச்சகட்ட மோதல்; ஒருவர் கொடூரமாக கொலை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது 3 பேரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபரும்அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளார்கள்.இந் நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் சேர்ந்து பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த வயல்பகுதிக்கு அன்று பிற்பகல் சென்றிருந்த ஆவளை கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிசாரிடம் தெரியப்படத்தியுள்ளதாக தெரியவருகின்றது.இதனையடுத்து குறித்த நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனா.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.