கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -பாட்டாளிபுரம் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று(29) காலை இடம்பெற்றது.
இதில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி வைத்திய சேவை பெற்று நன்மையடைந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டிலும் எம்கடமை அமைப்பின் அனுசரணையிலும் இவ் வைத்திய முகாம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டதோடு வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இவ் இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை அங்கத்தவர்கள் ,கிராம மட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூதூரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுப்பு. கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -பாட்டாளிபுரம் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று(29) காலை இடம்பெற்றது.இதில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி வைத்திய சேவை பெற்று நன்மையடைந்தனர்.தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டிலும் எம்கடமை அமைப்பின் அனுசரணையிலும் இவ் வைத்திய முகாம் இடம்பெற்றது.இதன்போது பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டதோடு வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.இவ் இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை அங்கத்தவர்கள் ,கிராம மட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.