• Apr 28 2024

குடும்பத்தாரோடு முரண்பாடு...! யாழில் தனியாக வசித்து வந்த நபர் திடீர் மரணம்..! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Sharmi / Mar 29th 2024, 8:09 pm
image

Advertisement

யாழில் குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் இன்று(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்த நிலையில் இளவாலை வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம்(29) சடலமாக மீட்கப்பட்டார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குடும்பத்தாரோடு முரண்பாடு. யாழில் தனியாக வசித்து வந்த நபர் திடீர் மரணம். பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல். யாழில் குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் இன்று(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்த நிலையில் இளவாலை வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம்(29) சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement