• Sep 08 2024

யாழில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம்- பொலிஸார் எடுத்த நடவடிக்கை...!

Sharmi / Jul 13th 2024, 9:44 am
image

Advertisement

யாழில் இடம்பெற்ற  இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில்  தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட  இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள்  குறித்த இசைநிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இசைநிகழ்வு இடம்பெற்ற வேளை நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம்- பொலிஸார் எடுத்த நடவடிக்கை. யாழில் இடம்பெற்ற  இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில்  தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட  இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றது.தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள்  குறித்த இசைநிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இசைநிகழ்வு இடம்பெற்ற வேளை நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement