அண்மையில் வீசிய மண்டோஸ் சூறாவளி மற்றும் கடல் கொந்தளிப்பால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அலை அடித்து மீனவர்களின் 30க்கும் அதிகமான படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் சேதமடைந்த தமது படகுகளை திருத்துவதற்கு பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என கவலை வெளியிட்டுள்ள மீனவர்கள் அரசாங்கம் தமக்கு நட்ட ஈட்டை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.