• May 02 2024

கண்டி மாவட்டத்தில் கோரத்தாண்டவமாடும் டெங்கு - 9048 பேர் பாதிப்பு..!samugammedia

mathuri / Dec 28th 2023, 9:19 pm
image

Advertisement

நாட்டில் தற்போது டெங்கு நோய் மிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில்,, கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, டெங்கு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதியாக மேல் மாகாணம் பதிவாகி இருப்பதோடு, கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 309 பெரும் , கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 995 பெரும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை டெங்கு நோயினால் நாடாளாவிய ரீதியில் இதுவரை 86 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கண்டி மாவட்டத்தில் கோரத்தாண்டவமாடும் டெங்கு - 9048 பேர் பாதிப்பு.samugammedia நாட்டில் தற்போது டெங்கு நோய் மிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில்,, கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, டெங்கு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதியாக மேல் மாகாணம் பதிவாகி இருப்பதோடு, கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 309 பெரும் , கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 995 பெரும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை டெங்கு நோயினால் நாடாளாவிய ரீதியில் இதுவரை 86 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement