• Jun 07 2025

தேசபந்து தென்னகோன் விவகாரம்; 3 ஆவது நாளாக தொடரும் விசாரணை..!

shanuja / Jun 4th 2025, 9:58 am
image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு நேற்று மூன்றாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது. 

 

அதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக் கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு வழங்கி வைக்கப்பட்டன. 


சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசாரணைக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக் கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாகக் குழுவில் சுட்டிக் காட்டினர். 

 

அத்துடன், நேற்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக் கடதாசிகள் குழுவின் முன்னிலையில் பிரதிவாதியான காவல்துறை அதிபர் தரப்பினருக்கு வழங்கப்பட்டதுடன், எஞ்சிய சத்தியக் கடதாசிகளை எதிர்வரும் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். 


முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக் கடதாசிகளை நேற்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

 

பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக் கடதாசிகளைப் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது எனக் குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

 

அதேநேரம், தேசபந்து தென்னகோனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மாத்தறை நீதவான் நீதிமன்றம் தமது சேவை பெறுநரைக் கைது செய்ய உத்தரவிட்ட பின்னர், அவர் தலைமறைவாக இருந்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

தேசபந்து தென்னகோன் விவகாரம்; 3 ஆவது நாளாக தொடரும் விசாரணை. கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு நேற்று மூன்றாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.  அதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக் கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு வழங்கி வைக்கப்பட்டன. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசாரணைக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக் கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாகக் குழுவில் சுட்டிக் காட்டினர்.  அத்துடன், நேற்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக் கடதாசிகள் குழுவின் முன்னிலையில் பிரதிவாதியான காவல்துறை அதிபர் தரப்பினருக்கு வழங்கப்பட்டதுடன், எஞ்சிய சத்தியக் கடதாசிகளை எதிர்வரும் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக் கடதாசிகளை நேற்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக் கடதாசிகளைப் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது எனக் குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.  அதேநேரம், தேசபந்து தென்னகோனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மாத்தறை நீதவான் நீதிமன்றம் தமது சேவை பெறுநரைக் கைது செய்ய உத்தரவிட்ட பின்னர், அவர் தலைமறைவாக இருந்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement