• May 12 2024

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்க - மீள பெறப்பட்ட குற்றச்சாட்டுகள்..!! samugammedia

Chithra / May 18th 2023, 9:11 am
image

Advertisement

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சிட்னியில் உலக கோப்பை கிரிக்கட் போட்டி இடம்பெற்ற வேளை இலங்கை கிரிக்கட் வீரரான தனுஷ்க குணதிலக பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் கடுமையான பல தடைகளை விதித்ததோடு நாட்டை விட்டு வெளியேற முடியாதெனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவர் மீது தொடுக்கப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் இன்று (18) மீள பெற்றதாக கூறப்படுகின்றது.

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்க - மீள பெறப்பட்ட குற்றச்சாட்டுகள். samugammedia அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் சிட்னியில் உலக கோப்பை கிரிக்கட் போட்டி இடம்பெற்ற வேளை இலங்கை கிரிக்கட் வீரரான தனுஷ்க குணதிலக பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தன.இதனை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் கடுமையான பல தடைகளை விதித்ததோடு நாட்டை விட்டு வெளியேற முடியாதெனவும் உத்தரவிட்டது.இந்நிலையில், இவர் மீது தொடுக்கப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் இன்று (18) மீள பெற்றதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement