யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் காணாமல் போன மீனவரின் குடும்பத்தை பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நேற்று கட்டுமரம் மூலம் மணற்காட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பயணித்த கட்டுமரம் மீட்கப்பட்டும் குறித்த மீனவர் கரை திரும்பவில்லை.
காணாமல் போன மீனவரை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடல் தண்ணீர் தெளிவின்மை காரணமாக சுழியோடிகளால் காணாமல் போன மீனவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து தேடுதல் பணி இடம்பெற்றுவருவதால் சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் மீனவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
யாழில் காணாமல்போன மீனவரை கண்டுபிடிப்பதில் சிரமம் யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் காணாமல் போன மீனவரின் குடும்பத்தை பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.நேற்று கட்டுமரம் மூலம் மணற்காட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பயணித்த கட்டுமரம் மீட்கப்பட்டும் குறித்த மீனவர் கரை திரும்பவில்லை.காணாமல் போன மீனவரை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கடல் தண்ணீர் தெளிவின்மை காரணமாக சுழியோடிகளால் காணாமல் போன மீனவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.தொடர்ந்து தேடுதல் பணி இடம்பெற்றுவருவதால் சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் மீனவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.